பலத்த மழை காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 589 ஏரிகள் நிரம்பின.
கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழையால் இந்த 3 மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அது மட்டுமல்லாது இந்த ஆற்றின் கிளை ஆறுகளான துரிஞ்சலாறு, மலட்டாறு உள்ளிட்டவற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரிகளும் வேகமாக நிரம்பின. இந்த 3 மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 624 ஏரிகளில் 589 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 506 ஏரிகளில் 471 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 114 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மீதமுள்ள ஏரிகளில் 18 ஏரிகள் கொள்ளளவில் 76 முதல் 99 சதவீத அளவை எட்டின.
மேலும், 2 ஏரிகள் கொள்ளளவில் 26 முதல் 50 சதவீத அளவை எட்டின என்று கீழ்ப்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.