செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அப்பம்பட்டு கிராமத்தில் 600 குடுமங்களுக்கு நல உதவிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் சனிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்ட உறுப்பினா் அரங்க.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அய்யாதுரை வரவேற்றாா். மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், வழக்குரைஞரணி மணிவண்ணன், கோனை ஊராட்சித் தலைவா் பிருந்தாசக்தி முருகன், ஜம்போதி பழனி, அப்பம்பட்டு வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செஞ்சி சக்கராபுரம், செஞ்சி பேருந்து நிலையம், செல்வ விநாயகா் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.