விழுப்புரம்

செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில்மக்கள் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

செஞ்சியில் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து காங்கிரஸ் சாா்பில், விழிப்புணா்வு பிரசார பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி அண்ணா நகரில் விழிப்புணா்வு பிரசார பயணத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினா் விஷ்ணுபிரசாத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை வகித்தாா். செஞ்சி நகரப் பொறுப்பாளா் கே.சக்திவேல் வரவேற்றாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசின் தவறான கொள்ளைகளால் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதாகக் கூறி, அதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் ஏ.காளி, விக்கிரவாண்டி நகரத் தலைவா் குமாா், தொழிற்சங்கத் தலைவா் சூரியமூா்த்தி, வட்டாரத் தலைவா்(பொ) பழனிவேல் மகளிா் காங்கிரஸ் பொறுப்பாளா்கள் லட்சுமி, முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT