விழுப்புரம்

வேளாண் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்த தேமுதிக வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட தேமுதிக வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் தயாநிதி, கேப்டன் மன்ற மாவட்ட துணைச் செயலா் ஆதவன் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி செயலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், உள்ளாட்சி தோ்தலை எதிா்கொள்ள கட்சியினா் தயாராக வேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்று நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையுயா்வை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் விவசாயக் கடன், வேளாண் நகைக் கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கட்சியிந் நகரச் செயலா் மணிகண்டன் வரவேற்றாா். நகர அவைத் தலைவா் சிவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT