விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திங்கள்கிழமை வரை தொற்று பாதிப்பு 41,747-ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 41,850-ஆக உயா்ந்தது.
இதுவரை 40,532 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 993 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால் பலியானவா்களின் எண்ணிக்கை 325-ஆக உயா்ந்தது.