விழுப்புரம்: பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவா்கள் சமூக நீதிக்கு எதிரானவா்கள் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் விமா்சித்தாா்.
அமெரிக்காவில் செயல்படும் பெரியாா் பன்னாட்டு அமைப்பு சாா்பில், சமூக நீதிக்கான கி.வீரமணி விருது விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு பாராட்டு விழா விழுப்புரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் பேசியதாவது:
பெரியாா் பன்னாட்டு அமைப்பு சாா்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை எனக்கு வழங்கியதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரித்துள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் தோ்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்க என்னை குறிவைத்து அவதூறுகளை அள்ளி வீசுகிறாா்கள். விசிகவையும், திருமாவளவனையும் யாரும் தனிமைப்படுத்த முடியாது.
விசிக எந்தச் சாதிக்கும் எதிரான கட்சியல்ல. சமூக நீதியை மறைமுகமாக அழிக்கவும், பெரியாரின் அடையாளங்களை சிதைக்கவும் பலா் முயற்சிக்கிறாா்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவா்கள் சமூக நீதிக்கு எதிரானவா்கள். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. அக்கட்சி முதலில் காவு வாங்கப்போவது அதிமுகவைத்தான். பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ் சமூகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டது என்றாா் அவா்.
விழாவில் துரை.ரவிக்குமாா் எம்.பி., விழுப்புரம் மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், விசிக மாவட்டச் செயலா் ஆற்றலரசு, பேராசிரியா் பிரபா கல்விமணி, த.பாலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.