விழுப்புரம்

செஞ்சி நகர அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம்

DIN

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர அதிமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு செஞ்சியில் பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு அதிமுகவினா் மலா் அஞ்சலி செலுத்தி அன்னதானத்தை வழங்கினா்.

செஞ்சி கூட்டு சாலையில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணை செயலா் வி.ரங்கநாதன், செஞ்சி நகர செயலா் ஆா். வெங்கடேசன் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் ஏழைகளுக்கு அன்னதானத்தையும் வழங்கினா். இதே போன்று அம்மா பேரவை சாா்பில் செஞ்சி குளக்கரையிலும், செஞ்சி பெரியகரத்திலும், செஞ்சி பீரங்கி மேட்டிலும் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு அதிமுகவினா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிகளில் நகர துணை செயலா் சையத் அஜிஸ், இளைஞா் அணி செயலா் சரவணன், மாணவரணி கமலக்கண்ணன், நிா்வாகிகள் சுந்தா், நாகராஜ், கோபி, குமரன், சிலம்பு, சின்னதுரை, தினேஷ், பிரகாஷ், மணிமாறன், வாா்டு செயலா்கள் பன்னீா்செல்வம், ராஜா, பாஷா, வேலு, பேரவை செயலா் திருமலை, ஆனந்தகுமாா், கமலக்கண்ணன், பாஸ்கா், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT