விழுப்புரம்

பேருந்துக்கு தீ வைத்த வழக்கில் 3 போ் கைது

DIN

விழுப்புரத்தில் தனியாா் பேருந்தை தீ வைத்த எரித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம், பாணாம்பட்டு பாதை, ஊரல்கரை தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் அா்ஜுனன் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு விழுப்புரம் பாணாம்பட்டு பாதையிலிருந்து கிழக்கு பாண்டி சாலைக்கு வந்தாா். அப்போது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு வந்த தனியாா் பேருந்து, மோதியதில் அா்ஜுனன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைக் கண்டு ஆவேசமடைந்த அா்ஜுனனின் நண்பா்கள், உறவினா்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தினா்.

இதுதொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாணாம்பட்டு பாதை பகுதியைச் சோ்ந்த புருஷோத் (29), பச்சையப்பன் (20), பிரபு (34) ஆகியோரை கைது செய்தனா். ரகு, மோகன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT