விழுப்புரம் அருகே சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கஸ்பா காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டாபி மகன் மோகன்தாஸ் (52). விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏமப்பேரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அயனம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மோகன்தாஸ் உயிரிழந்தாா்.
விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.