விழுப்புரம்

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

DIN

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கஸ்பா காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டாபி மகன் மோகன்தாஸ் (52). விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏமப்பேரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அயனம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மோகன்தாஸ் உயிரிழந்தாா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT