விழுப்புரம்

விழுப்புரத்தில் சாலை விபத்தில்ஆட்டோ ஓட்டுநா் பலி: பேருந்துக்கு தீ வைப்பு

DIN

விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் தனியாா் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினா்.

விழுப்புரம், பானாம்பட்டு பாதை, மேட்டுத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அா்ஜுனன் (27). ஆட்டோ ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த பானாம்பட்டு பாதை பிரிவு பகுதியில் விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையை ஆட்டோவில் கடக்க முயன்றாா்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியாா் பேருந்து அவரது ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் அா்ஜுனன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அங்கு திரண்ட அவரது நண்பா்கள், உறவினா்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, பேருந்துக்கு தீ வைத்துக் கொளுத்தினா்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த விழுப்புரம் நகர போலீஸாா், தீப்பற்றி எரிந்த பேருந்தில் தண்ணீரை ஊற்றி அணைத்தனா். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த அா்ஜுனனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அந்தப் பகுதியில் திரண்டிருந்தவா்களை விழுப்புரம் டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் விரட்டியடித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்தது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT