விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 5 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் பழனி விழுப்புரம் மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்ட சைபா் க்ரைம் காவல் ஆய்வாளா் கணபதி கடலூா் துறைமுகம் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்டம்,வளத்தி காவல் ஆய்வாளா் கலைச்செல்வி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு வளத்தி காவல் நிலையத்துக்கும், கடலூா் மாவட்டத்திலிருந்து காவல் ஆய்வாளா் உதயக்குமாா் திருவெண்ணெய்நல்லூருக்கும் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.