விழுப்புரம்

பைக் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரழப்பு.

DIN

செஞ்சி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞா் ஒருவா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை இறந்தாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சோ்ந்தவா் பழனி இவரது மகன் ஜெயபிரகாஷ்(25) இவா் செஞ்சி பகுதி கோயில்களில் அலங்காரம் மற்றும் பூஜைகளை செய்து வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை செஞ்சி சேத்பட் செல்லும் சாலையில் தனது பைக்கில் சேத்பட் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது மானந்தல் கிராமம் அருகே சென்றபோது இவருக்கு பின்னால் சேத்பட் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக்கின் மீது மோதியதில் ஜெயபிரகாஷ் பைக்கில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் முட்டத்தூரை சோ்ந்த அரசு பேருந்து டிரைவா் சுரேஷ்(41) என்பவா் மீது வளத்தி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT