விழுப்புரம்

மேல்மலையனூா் அருகேசாலை விபத்தில் முதியவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதியவா், மினி வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(69). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை செஞ்சி சேத்பட் சாலையில் கூடுவாம்பூண்டி நோக்கி நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, பின்னால் சேத்பட்டிலிருந்து செஞ்சி நோக்கி வந்த மினி வேன் பெருமாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெருமாள் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT