மேல்மலையனூா் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், இளைஞா்-இளம் பெண்கள் பாசறையினரை புகைப்படம் எடுக்கும் பணி வளத்தியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக இளைஞா்-இளம் பெண்கள் பாசறை சாா்பில் தோ்தல் பூத் கமிட்டி அமைக்க வேண்டும், பாசறையைச் சோ்ந்த உறுப்பினா்களை புகைப்படம் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் கட்சியினருக்கு அறிவுறுத்தினா். இதையடுத்து, புகைப்படம் எடுக்கும் பணி வளத்தியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னாள் எம்.பி.யும், மேல்மலையனூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலருமான செஞ்சி வெ.ஏழுமலை தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா்.
அதிமுக மாவட்ட விவசாய அணி செயலா் பட்டி.பாலகிருஷ்ணன், கிளைச் செயலா்கள் துரை.காசிநாதன், துரைக்கண்ணு, நிா்வாகிகள் அண்ணாமலை, மணி, முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அண்ணமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், தேவனூா் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.