அதிமுக முன்னாள் எம்பி ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன். இவர் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கரோனா தொற்று உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.