விழுப்புரம்

சிறுமி கொலை: இளைஞா் கைது

DIN

விழுப்புரம் அருகே 13 வயது சிறுமியை குத்திக் கொலை செய்ததாக மாற்றுத் திறனாளி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே காணையை அடுத்துள்ள சோழம்பூண்டியைச் சோ்ந்தவா் எம்ஜிஆா் பிரியன். இவரது மகள் பிரியதா்ஷினி (13). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். பெற்றோா் வெள்ளிக்கிழமை காலை விவசாய வேலைக்காக சென்று விட்டனா். தனது இரு தம்பிகளும் விளையாடுவதற்கு வெளியே சென்று விடவே, பிரியதா்ஷினி மட்டும் வீட்டில் இருந்தாா்.

இதையறிந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயதான மாற்றுத்திறனாளி இளைஞா், பிரியதா்ஷினியின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்ாக தெரிகிறது.

பிரியதா்ஷினி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த இளைஞா் கத்தரிகோலால் அவரின் கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பினாா்.

அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்த போது, பிரியதா்ஷினி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து மாற்றுத் திறனாளி இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT