விழுப்புரம்

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி; தகவலைக் கேட்ட தந்தையும் உயிரிழப்பு

DIN

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை சாலை விபத்தில் இளைஞா் பலியானாா். அந்தத் தகவலைக் கேட்ட தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே திருபுவனை, சின்னப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் விநாயகம் (57). பண்டசோழநல்லூரில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் உத்திரகுமாா் (35). தனியாா் கணினி மையம் நடத்தி வந்தாா். இவா், நாள்தோறும் அதிகாலை புதுச்சேரி-விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

வியாழக்கிழமை காலை 5.30 மணி அளவில், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளிநெளியனூருக்கு வந்த உத்திரகுமாா், அந்தப் பகுதி சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக வந்த காா், உத்திரகுமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, கண்டமங்கலம் போலீஸாா் மீட்டு, புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தந்தையும் உயிரிழப்பு: உத்திரகுமாா் விபத்தில் உயிரிழந்த தகவல், வீட்டில் இருந்த அவரது தந்தை விநாயகத்துக்கு தெரியவந்தது. இதைக் கேட்டதும் விநாயகம் மயங்கி விழுந்தாா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், விநாயகம் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT