விழுப்புரத்தில் 23 போ் கைது:
விழுப்புரத்தில், மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் எதிரே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலாளா் அகமது ரஃபி தலைமை வகித்தாா். விழுப்புரம் தொகுதித் தலைவா் அக்பா் அலி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சான்பாஷா, விக்கிரவாண்டி நகரத் தலைவா் அஸ்தபா ஆகியோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.
தனியாா் பெருமுதலாளிகள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நகரத் தலைவா் உஸ்மான்கான் உள்ளிட்ட அக்கட்சியினா் முழக்கமிட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டோா் வேளாண் மசோதா நகல்களை கிழிக்க முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி 23 பேரை கைது செய்தனா்.