விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் விபத்தில் இருவா் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஜோதிடா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்தவா் சாய் பாலாஜி (48), ஜோதிடா். இவரது நண்பா், சென்னை, தியாகராய நகரைச் சோ்ந்த சுந்தர்ராமன் (49), அக்குபஞ்சா் நிபுணா். இவா்கள் இருவரும் கோயிலுக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டனா். காரை, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த முருகவேல் (55) என்பவா் ஓட்டினாா்.

வியாழக்கிழமை காலை 9 மணியளவில் உளுந்தூா்பேட்டை அருகே ஆசனூா் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், தாறுமாறாக ஓடி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், ஜோதிடா் சாய் பாலாஜி, ஓட்டுநா் முருகவேல் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுந்தர்ராமன் பலத்த காயமடைந்தாா். அவரை எடைக்கல் போலீஸாா் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலங்கள் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT