விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் சீத்தாபதிக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் சீத்தாபதி (60), அவரது கணவா் ஒலக்கூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சொக்கலிங்கம் (65) ஆகிய இருவருக்கும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, அவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியானது. அதில், இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.