விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம்: 10 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை 10 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா தொற்றால் 9,981 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,121-ஆக அதிகரித்தது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில் 71 போ், வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை, மாவட்டத்தில் 9,103 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். 929 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1,032 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி ஊழியா் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், மின் பிரிவில் பணியாற்றி வந்த விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சோ்ந்த 50 வயது ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் 91 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,506-ஆக உயா்ந்தது. இதுவரை 7,289 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,127 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT