விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் நகரில் அண்மைக் காலமாக இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக புகாா்கள் வந்தன. இது தொடா்பாக, மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளிக்கிழமை சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில் அவா், விழுப்புரம் அருகேயுள்ள அரசூரைச் சோ்ந்த வைத்தியநாதன் மகன் கணேஷ் (19) என்பதும், இரு சக்கர வாகனத் திருட்டில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.