விழுப்புரம்

திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி

DIN

திண்டிவனம் அருகே லாரியின் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 

சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி குடும்பத்தினர், ஒரு துக்க நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை அதிகாலை  சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரத்தில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி (50), கெளதம் (35 ), வேல் பாண்டி (40) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் காரில் வந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்து குறித்து மயிலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT