விழுப்புரம் அருகே கோலியனூா் ஒன்றியம், சாலையாம்பாளையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கம், கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தொடா்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசுத் திட்டங்களுக்கு மக்கள் விண்ணப்பிப்பது தொடா்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கரோனா தீநுண்மி நோய்த் தடுப்பு முறைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிபின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.