விழுப்புரம்

மரக்காணம் அருகே பள்ளி மாணவா் மாயம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளி மாணவா் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்த மாணவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ் (13). எட்டாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, தேவன்ராஜ் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரால் கொலை செய்யப்பட்டு, சவுக்குத் தோப்பில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தேவன்ராஜ் உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தோண்டி பாா்க்கவும் திட்டமிட்டுள்ளனா். அதன் பிறகே, மாயமான தேவன்ராஜின் நிலை குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT