சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் பிரசார பயணம் மேற்கொள்ளும் நிா்வாகிகளுக்கான பயிலரங்கம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் பாண்டியன், ஜெயக்குமாா், ராஜேந்திரன், அருள், முன்னாள் மாவட்டத் தலைவா் விநாயகம், மாவட்டப் பொருளாளா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலப் பொதுச் செயலாளா்கள் கே.டி.ராகவன், கேசவ விநாயகம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் தாஸசத்யன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில், பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டவுள்ள வெற்றிவேல் யாத்திரையை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொள்ள தயாராவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.