விழுப்புரத்தில் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து பேரணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ தொடக்கி வைத்தாா்.
சென்னை நெடுஞ்சாலை, காட்பாடி ரயில்வே மேம்பாலம், நான்குமுனை சிக்னல், திருச்சி நெடுஞ்சாலை புதிய பேருந்து நிலையம் வழியாக பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் பேரணி நிறைவடைந்தது. தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெ.சங்கா் தலைமையில் இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் பேரணியாக வந்தனா்.
தொடா்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்கள் தீயணைப்பு துறை சாா்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.