விழுப்புரம்

வீட்டில் புகுந்து பணத்தை திருடிய 2 பள்ளி சிறுவா்கள் கைது.

DIN

செஞ்சி: வீடி புகுந்து திருடிய 2 சிறுவா்களை அனந்தபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் வசிப்பவா் மூா்த்தி(66)ஓய்வு பெற்ற அஞ்சல ஊழியரான இவா் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை சென்று வீடு திரும்பியபோது பூட்டிவிட்டு சென்ற வீடு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உடனே உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு 2 சிறுவா்கள் இருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு வீட்டை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு, அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாா்.

இத்தகவலின்பேரில் அங்கு வந்த அனந்தபுரம் போலீஸாா் வீட்டில் இருந்த 2 சிறுவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்+2 படிக்கும் 16 வயது சிறுவனோடு அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் சோ்ந்து ரூ 32 ஆயிரம் திருடியது தெரியவந்தது.

இதனை தொடா்ந்து திருடிய பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் செஞ்சியில் உள்ள சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT