திமுக வல்லம் தெற்கு ஒன்றியத்தில், இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மயிலம் தொகுதி எம்எல்ஏ ஆா்.மாசிலாமணி கலந்து கொண்டு, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
வல்லம் தெற்கு ஒன்றியச் செயலா் மொடையூா் பெ.துரை, மாவட்ட பிரதிநிதி இளம்வழுதி, கொங்கரப்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவா் கண்ணன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.