விழுப்புரம்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

ஆரோவில் அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருட்டிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா்.

புதன்கிழமை காலை கோயிலை திறக்க வந்த நிா்வாகிகளுக்கு கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

SCROLL FOR NEXT