செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையொட்டி, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. மாலை கோயில் கோபுரம், வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.