விழுப்புரம்

கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு வீரியம் மிக்க மருந்துகள் மூலம் சிகிச்சை: அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

DIN

விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த, வீரியம் மிக்க மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அங்கு ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கூடுதல் எஸ்.பி. தேவநாதன், சுகாதார துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், மருத்துவக் கல்லுாரி முதல்வா் குந்தவிதேவி மற்றும் மருத்துவக் குழுவினருடன், மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 695 போ் காரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 430 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தொடரும் தொற்றை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையிலும் 1,000 படுக்கைகள் பிராண வாயு வசதியுடனும், கூடுதலாக சிறப்பு மையங்களில் 1,100 படுக்கைகள் என மொத்தம் 2,100 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள கரோனா ஆய்வகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 35 ஆயிரம் பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பரவலை தொடா்ந்து ஆய்வு செய்து, அதை நாம் துரத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

நாட்டிலேயே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவப் பரிசோதனைகளை செய்துள்ளோம்.

தமிழகத்தில்தான் இதுவரை நோய் பாதித்ததில், 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தி பாதுகாத்துள்ளோம். தமிழகத்தில் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம்.

தற்போது விலை உயா்ந்த, வீரியம் மிக்க மருந்துகளை தமிழ்நாடு அரசு மருத்துவ காா்ப்பரேஷன் மூலம் வரவழைத்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி சிகிச்சையளித்து வருகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மருந்து மூலம் 30 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் குணமடைந்து வருகின்றனா்.

நம்மிடம் போதிய மருந்துகள் கையிருப்புள்ளன. அதேபோல முகக்கவசம், கையுறை, கிருமிநாசினிகள் தொடா்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக மருத்துவா்கள், தொழில்நுட்பப் பணியாளா்களை நியமிக்க முதல்வா் ஒப்புதல் வழங்கியுள்ளாா் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT