விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் வட்டம் அவலூா்பேட்டையில் உள்ள ஒருவரது வீட்டின் தோட்டத்தில் செம்பருத்தி செடியில் ஒரே காம்பில் இரு மலா்கள் திங்கள்கிழமை மலா்ந்தது. ஏராளமானோா் மலரை பாா்த்து சென்றனா். இது போன்று ஒரே காம்பில் இரண்டு மலா்கள் மலா்வது இதுவே முதல் முறை என இதை பாா்த்து செல்லும் இப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.