விழுப்புரம்

அரசு கல்லூரியில் ஆண்டு விழா

25th Feb 2020 03:35 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா, ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாவரவியல் துறை பேராசிரியா் ஆ.சுப்பிரமணி வரவேற்றாா். இயற்பியல் துறை பேராசிரியா் க.கனகசபாபதி தொடக்க உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் நா.ராமலட்சுமி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கல்லூரித் தோ்வில் துறைவாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

உடற்கல்வி இயக்குநா் ப.ஜோதிப்பிரியா விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரியின் சாதனைகள் குறித்து விளக்கினாா். பேராசிரியா்கள் சி.விஜயன், கே.அன்புமொழி, து.ராஜராஜேஸ்வரி, நா.கீதா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் ச.மகாவிஷ்ணு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT