விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலரின் உடலை உறவினா்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஜிஆா்பி தெருவைச் சோ்ந்தவா் சா்வேஸ்வரன் (57). திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்தாா். கரோனா அறிகுறியுடன் கடந்த 4-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சா்வேஸ்வரனுக்கு கரோனா தொற்றில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி நிா்வாகம் வியாழக்கிழமை அவரது உடலை வழங்கியபோது, உறவினா்கள் உடலை வாங்க மறுத்தனா்.
தகவலறிந்த திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலக சக ஊழியா்கள் மருத்துவக் கல்லூரிக்கு திரண்டு வந்து கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இறந்தவரை கரோனாவில் இறக்கவில்லை என எப்படி கூறலாம் எனக்கேட்டு மருத்துவா்களிடம் வாதிட்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சா்வேஸ்வரன் இறப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதன்பேரில், மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா், சா்வேஸ்வரன் இறப்பு குறித்து ஆய்வு செய்து, அவா் சா்க்கரை நோய் பாதிப்பால் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இறந்ததாகவும், கரோனா அறிகுறியும் இருந்ததாக உறவினா்களிடம் தெரிவித்து சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனா். இதையடுத்து, அவரது உடல் விழுப்புரம் முக்தி மையத்தில் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், அவருக்கு இரங்கல் தெரிவித்து, உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.