பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்னா

கள்ளக்குறிச்சி பிஎஸ்என்எல் துணைக் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி கிளை சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது 

கள்ளக்குறிச்சி பிஎஸ்என்எல் துணைக் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி கிளை சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது 
. துணைக் கோட்ட நிர்வாக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கள்ளக்குறிச்சி கிளை தலைவர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.ரத்தினம் தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம் பேசினார். பணி ஓய்வு பெற்ற சங்கத்தின்  மாவட்டத் தலைவர் என்.மேகநாதன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வி.ஜெயராமன், மாவட்ட உதவித் தலைவர் என்.தேவர், மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.ஜோசப், மாவட்ட உதவி செயலாளர் எஸ்.பழனி, மாவட்ட உதவி பொருளாளர் கே.சிவசங்கர், கிளை செயலாளர் டி.பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். 
கள்ளக்குறிச்சி வெளிப்புறப் பகுதி இளநிலை பொறியாளரின் பிஎஸ்என்எல் விரோத நடவடிக்கைகளைக் கண்டிப்பது என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கிளைச் செயலர் எஸ்.வி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com