திண்டிவனத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
செஞ்சி சாலையில் உள்ள அண்ணா ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் ஆதனப்பட்டு சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர் மாரிமுத்து செயலர் சக்திவேல், பொருளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ராமதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலை விழிப்புணர்வு குறித்து ஓட்டுநர்களிடம் விரிவாக எடுத்து கூறி சாலை பாதுகாப்பு குறித்த கையேடுகளை வழங்கினார்.