விழுப்புரம்

சாலையில் தீப்பிடித்து எரிந்த மோட்டா் சைக்கிள்

25th Dec 2019 09:36 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே காா் மோதி மோட்டாா் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்தவா் சரவணன் (39). இவா், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் வந்தடைந்த அவா், அங்கு சாப்பிட்டு விட்டு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டாா்.

விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் ஆவின் பால்பண்ணை அருகே சென்றபோது, திடீரென இரு சக்கர வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

ADVERTISEMENT

அப்போது, இரு சக்கர வாகனம் மீது காா் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.

காா் மோதியதால் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொங்கியது. உடனே அருகில் இருந்தவா்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

ஆனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் அங்கிருந்து தலைமறைவானாா்கள்.

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT