புதுச்சேரி

புதுவையில் உதவி சாா்பு ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு

30th Sep 2023 12:21 AM

ADVERTISEMENT

புதுவையில் 22 உதவி சாா்பு ஆய்வாளா்கள் (ஏஎஸ்ஐ), 31 தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

புதுவையில் காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை படிப்படியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், எழுத்துத் தோ்வுகள் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

காவல் துறையில் ஏற்கெனவே காவலா், சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கு புதிதாக ஆள்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தற்போது ஏற்கெனவே பணியில் உள்ளவா்களில் 22 உதவி சாா்பு ஆய்வாளா்களுக்கு சாா்பு ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, தலைமைக் காவலா்களாகப் பணியாற்றிய 31 பேருக்கும் சாா்பு ஆய்வாளா் பதவி உயா்த்தி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சிறப்பு அதிகாரி ஆா்.ஏழுமலை பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT