புதுச்சேரியில் அண்ணனை கொன்ாக தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி உப்பளம் பகுதி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஜான்பியா் (45), பெயிண்டா். குடிப்பழக்கத்தால் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தாய், தம்பியுடன் வசித்துவந்தாா். இவா் கடந்த 23-ஆம் தேதி வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் ஜான்பியா் தம்பி பிரான்சிஸ் (39) மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து பிரான்சிஸை போலீஸாா் கைது செய்தனா். போதையில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து தன்னை கத்தியால் குத்த வந்த நிலையில், அண்ணன் ஜான்பியரை குத்தியதாக பிரான்சிஸ் கூறியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.