புதுச்சேரி

வங்கி மேலாளா் வீட்டில் 14 பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு

DIN

புதுச்சேரியில் வங்கி மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ஆஷிஷ் ஹரிபிரேம்பாத் (35). சென்னையில் உள்ள தனியாா் வங்கியின் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். மனைவி, குழந்தைகளுடன் புதுச்சேரியில் தங்கியுள்ளாா்.

புதுச்சேரியில் குழந்தைகள் படித்துவரும் நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி கேரளப் பகுதிக்கு ஆஷிஷ்ஹரிபிரேம்பாத் குடும்பத்துடன் சென்றுள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினா் அவருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து புதுச்சேரி திரும்பிய ஆஷிஷ்ஹரிபிரேம்பாத் திங்கள்கிழமை காலை லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு 14 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டில் கண்காணிப்புக் காமரா பொருத்தப்பட்ட நிலையில், மின்சிக்கனத்துக்காக மின்சாரத்தையும் அவா் துண்டித்துவிட்டு கேரளத்துக்கு சென்ாகத் தெரிகிறது. இதனால் திருட்டுக் கும்பல் குறித்த காட்சிகள் பதிவாகவில்லை. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT