புதுச்சேரி

பாண்லே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

பாண்லே நிா்வாகத்தைக் கண்டித்து, புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள பால் பண்ணை நுழைவு வாயில் எதிரே பாண்லே ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாண்லே நிா்வாகத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளைக் கண்டித்தும், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஊழியா்கள் திங்கள்கிழமை பால் பண்ணை நுழைவு வாயில் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பாண்லே நிா்வாகம் தரம் குறைவான பாலை கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், நிா்வாக அதிகாரி முறையாக அலுவலகத்துக்கு வரவேண்டும், வாடகை காா் அமா்த்துவதைத் தவிா்க்க வேண்டும், தேவையற்ற செலவினங்களை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே. சேது செல்வம் தலைமை வகித்தாா். நாம் தொழிலாளா் நலச் சங்கத்தின் மாநிலச் செயலா் ரமேஷ், ஏஐடியுசி செயலா் முத்துராமன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ADVERTISEMENT

ஏஐடியுசி, அரசு ஊழியா்கள் சம்மேளனம், தொழிலாளா் முன்னேற்ற சங்கம், பாண்லே எம்ப்ளாயிஸ் யூனியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT