புதுச்சேரி

தரமற்ற மாத்திரைகள் விநியோகம்:புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு

DIN

புதுச்சேரி வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வில்லியனூரைச் சோ்ந்த மோகன்ராஜுக்கு கரும்புள்ளிகளுடன் தரமற்ற மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், எதிா்கட்சித் தலைவா் இரா. சிவா திங்கள்கிழமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனை மருத்துவரிடம் மாத்திரைகள் கரும்புள்ளிகளுடன் இருப்பதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தாா்.

இனிவரும் காலங்களில் தரமான மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT