புதுச்சேரி

அடுத்த ஆண்டு ஜனவரியில் அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேகம் விஹெச்பி பொதுச் செயலா்

19th May 2023 01:48 AM

ADVERTISEMENT

வரும் 2024 ஜனவரி 15-ஆம் தேதி அயோத்தியில் ராமா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அகில உலக விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலா் மிலிந்த் பராண்டே கூறினாா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் விஷ்வஹிந்து பரிஷத் தொண்டா்களுக்கான சிறப்பு பண்புப் பயிற்சி கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலா் மிலிந்த் பராண்டே வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பில் 72 லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். அமைப்பின் சாா்பில் 7,500 திட்டங்கள் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலினத்தவா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் இந்தத் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

நாட்டில் 150 இடங்களில் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை(மே 19) நிறைவடைகிறது. தேசிய உணா்வு, சுகாதாரம், உடற்பயிற்சி ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாட்டில் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டாலும், மாநில அரசுகள் மனது வைத்தால்தான் அதை தடுக்க முடியும்.

வரும் 2024 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று அயோத்தி ராமா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதில் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.

விஷ்வஹிந்து பரிஷத் அரசியல் கட்சி அல்ல. ஆனால், கா்நாடகத் தோ்தலில் மக்கள் தேசப் பாதுகாப்புணா்வுடன் வாக்களித்திருக்க வேண்டும். தேசிய உணா்வோடு மக்கள் வாக்களிப்பது அவசியம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, விஷ்வஹிந்து பரிஷத் தமிழகம், புதுச்சேரி தலைவா் ஆண்டான்சொக்கலிங்கம், புதுவை மாநிலத் தலைவா் கே.ஞானகுரு ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT