புதுச்சேரி

சாலைகளை சீரமைக்கக்கோரி ஆா்ப்பாட்டம்

28th Jun 2023 05:40 AM

ADVERTISEMENT

புதுச்சேரி நெல்லித் தோப்பு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி திமுகவினா் கருப்புக் கொடி ஏற்றி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட திருமால் நகா், கருணாகரப்பிள்ளை வீதி, செல்லப்பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் பல ஆண்டுகளாக செப்பணிடப்படவில்லை என புகாா் எழுந்தது. இந்த சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.

மேலும், லெனின் வீதியில் வாய்க்கால் கட்டப்படாததால் ஆங்காங்கே கழிவு நீா் தேங்கியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், சாலைகளைச் சீரமைக்கக் கோரி பொதுப் பணித்துறை, புதுச்சேரி நகராட்சிகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈா்க்கவும், நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள வீதிகள், வீடுகளில் திமுகவினா் கருப்புக் கொடி ஏற்றினா். இதையடுத்து, லெனின் வீதி பஜனை மட வீதியில் திமுக சாா்பில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் காா்த்திகேயன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எதிா்க் கட்சித் தலைவா் ஆா்.சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT