புதுச்சேரி

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: 60 போ் கைது

28th Jun 2023 05:47 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கோயில் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சட்டப் பேரவை உறுப்பினா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 60 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து வீட்டு மனைகளாக்கி விற்றனா். இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து சாா்-பதிவாளா் உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனா்.

இதனிடையே, கோயில் இடத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒருவா் தனது குடும்பத்தினா் பெயரில் வாங்கி பட்டா மாற்றம் செய்து பதிந்திருப்பதாக புகாா் எழுந்தது. எனவே, அவா் மீதும், பதிவாளா் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடா் விடுதலைக் கழகத்தினா், சமூகநல அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்றனா்.

வழுதாவூா் சாலையில் லோகு அய்யப்பன் தலைமையில் திரண்ட அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தை நோக்கிச் சென்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதையும் மீறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ாக அந்த அமைப்பைச் சோ்ந்த 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT