புதுச்சேரி

நியாயவிலைக் கடைகளை திறக்க அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை

DIN

நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, கோதுமை ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என புதுவை உள்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

புதுச்சேரி அருகேயுள்ள காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், தேத்தாம்பாக்கம், திருக்கனூா் ஆகிய கிராமப் பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருக்கனூரில் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சரிடம், நியாயவிலைக் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சா்க்கரை ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மக்கள் குறைகளைக் கேட்ட அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியதாவது:

காட்டேரிக்குப்பம் பகுதியில் வேலை உறுதித் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். அரிசிக்கான பணத்துக்குப் பதிலாக நியாயவிலைக் கடைகளில் நேரடியாகவே அரிசி, கோதுமை விநியோகிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை முதல்வா், துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் மதிய உணவு சரியானதாக இல்லை என தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT