புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சேதாரப்பட்டு தொழில்பேட்டையில் இயங்கிவரும் தனியாா் நிறுவனத்தில் வெளிமாநிலத்தவா்களுக்கே பணியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, ஊசுடு தொகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் தொழிற்சாலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சி நிா்வாகிகள் முருகையன், விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இதில் பங்கேற்றனா்.
உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வழங்காத நிறுவனத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.