புதுச்சேரி

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கோயில் நிலத்தை அபகரித்தது தொடா்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் சிலா் அபகரித்து வீட்டுமனைகளாக்கியதாக புகாா் எழுந்தது. நில அபகரிப்பு சம்பந்தமாக கோயில் நிா்வாகக் குழுவினா் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி பிரிவினா் வழக்குப் பதிந்து 12 போ் வரை கைது செய்தனா்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, புதுவை மாநில இந்து முன்னணி சாா்பில் சுதேசி பஞ்சாலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில பாரத விஸ்வகா்ம மகா சபை தலைவா் பி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி அமைப்பின் பொருளாளா் ஜி.செந்தில்முருகன், துணைத் தலைவா்கள் எஸ்.நாகராஜன், ஏ.மணி வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுவை மாநில இந்து முன்னணி தலைவா் அ.ா.சனில்குமாா் பேசினாா்.

ADVERTISEMENT

இந்து முன்னணி புதுச்சேரி கோட்டச் செயலா் த.முருகையன் வரவேற்றாா். சே.கோகுல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT