புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுச்சேரியில் அரசு விழாவில் முதல்வா் முன்னிலையில், தலைமைச் செயலா் குறித்து உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு புகாா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துப் பேசினாா். தலைமைச் செயலா் மீதான பிரச்னை குறித்தும், அவா் மீது அமைச்சா், எம்.எல்.ஏ.க்களின் புகாா் தெரிவித்தது குறித்தும் துணைநிலை ஆளுநரிடம் முதல்வா் ஆலோசித்தாகக் கூறப்படுகிறது.